பிருத்திவிராஜ் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவான கேங்ஸ்டர் படம் லூசிஃபர். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாக சாதனை படைத்தது என்று கூறலாம். 30 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் கிட்டத்தட்ட 175 கோடி வரை வசூல் சாதனை படைத்தது.
மோகன்லாலுடன், விவேக் ஓபராய், மஞ்சு வாரியர், டோவினோ தாமசு, சாய்குமார், விஜய் சந்தோஷ் போன்ற பல பிரபலங்கள் நடிப்பில் உருவானது தான் இப்படம். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கலாம் என்று பிருத்திவிராஜ் முடிவு செய்துள்ளாராம். கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் பணிகள் அப்படியே முடங்கி விட்டன.
ஆனால் தற்போது மோகன்லால் மற்றும் பிருத்திவி ராஜ் கூட்டணியில் ‘ப்ரோ டாடி’ என்ற படத்தின் மூலம் மீண்டும் இவர்கள் இணையவுள்ளனர். இந்த படம் பிருத்திவி ராஜ் மகள் நான்கு வரியில் மட்டுமே எழுதிய கதையை வைத்து உருவாக்கப்படுகிறது.
அதாவது இரண்டாம் உலகப்போரில் அகதிகளாக இருக்கும் அப்பா மற்றும் மகளுக்கான பாசத்தை வைத்து குடும்பப்பாங்கான ஒரு திரைப்படமாக எடுக்க உள்ளனர். திரிஷ்யம் படத்தின் இரண்டு பாகத்திலும் மோகன்லால் மற்றும் மீனாவின் ஜோடிப்பொருத்தம் மிகவும் அற்புதமாக அமைந்தது.
அதுமட்டுமில்லாமல் திரிஷ்யம் படத்தின் இரண்டு பாகமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மீண்டும் ‘ப்ரோ டாடி’ இந்த படத்திலும் மோகன்லாலுக்கு ஜோடியாக மீனாவையே போடலாம் என்று படக்குழுவினர் முடிவெடுத்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.