தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக இன்று வரை திகழ்ந்து வருபவர் தான் செல்வராகவன். இவர் 2002 ஆம் ஆண்டு துள்ளுவதோ இளமை எனும் திரைப்படத்தின் எழுத்தாளராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து இயக்குனராக 2003 ஆம் ஆண்டு காதல் கொண்டேன் எனும் திரைப்படத்தை இயக்கினார்.
2004 ஆம் ஆண்டு 7ஜி ரெயின்போ காலனி என்னும் திரைப்படத்தை இவர் இயக்கியுள்ளார். அந்த திறப்பிடம் மாபெரும் வெற்றி படமாக இவருக்கு அமைந்தது.இந்த திரைப்படத்தில் ரவி கிருஷ்ணா நடிகராகவும் சோனியா அகர்வால் நடிகையாகவும் நடித்திருந்தனர்.
7 ஜி ரெயின்போ காலனிக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் வெளிவந்த கால கட்டத்தில் இருந்து இன்று வரை அவரது இசை புகழ் பெற்று வருகிறது.இவ்வாறு இவர் ஒரு வெற்றியை இயக்குனராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். 2010 ஆம் ஆண்டு சோழர்களின் வரலாறை வைத்து ஆயிரத்தில் ஒருவன் எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார் அந்த திரைப்படம் வெளிவந்த காலத்தில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை ஆனால் தற்பொழுது அந்த படத்திற்கு மிகப்பெரும் வரவேற்பு இருக்கிறது.இயக்குனர் செல்வராகவன் தற்பொழுது நடிகர் தனுஷை வைத்து நானே வருவேன் எனும் ஒரு ஆக்சன் திரில்லர் படத்தை இயக்கியுள்ளார் அந்தப் படத்திற்கும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து தற்பொழுது செல்வராகவன் படத்தை இயக்குனர் ஆகும் படத்தில் நடிகராகவும் நடித்த வருகிறார்.தற்பொழுது ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகமும் புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகமும் தயாராகி வருவதாக தகவல் வெளியாகும் நிலையில் 7 ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இயக்குனர் செல்வராகவன் தற்பொழுது நடிகர் தனுஷை வைத்து நானே வருவேன் எனும் ஒரு ஆக்சன் திரில்லர் படத்தை இயக்கியுள்ளார் அந்தப் படத்திற்கும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.