Friday, March 24, 2023
Homeசினிமாதன்னுடைய மகனை முதன்முறையாக கோவிலுக்கு அழைத்துச் சென்ற காஜல் அகர்வால்...

தன்னுடைய மகனை முதன்முறையாக கோவிலுக்கு அழைத்துச் சென்ற காஜல் அகர்வால்…

காஜல் அகர்வால் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார் இவர் முதன் முதலில் தெலுங்கு சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டார். தமிழில் பழனி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா திரைக்கு அறியபட்டார்.

இதன்பிறகு இவர் மகதீரா என்ற திரைப்படத்தில் நடித்த மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்தார். இந்த திரைப்படத்திற்காக ஃபிலிம் பேர் விருது பெற்றார். இதற்கு பிறகு பிருந்தாவனம், மிட்டர், பெரு பொட்டு, பிசினஸ் மேன், சில்லா போன்ற திரைப்படங்களில் வெற்றி வாய்ப்பை சுடினார். இதனால் இவர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகின்றார்.

இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஹே சினாமிகா என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது இந்த திரைப்படத்திற்கு பிறகு சங்கரி இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துக் கொண்டிருக்கும் இந்தியன் 2 என்ற திரைப்படத்தில் இவர் நடித்து வருகின்றார்.

அதனைப் போல் காஜல் நடித்துள்ள கோஷ்டி என்ற திரைப்படமும் படப்பிடிப்பு முடிந்து திரையரங்கில் வெளியிடுவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது.இந்த நிலையில் தற்பொழுது நடிகை காஜல் அகர்வால் தனது மகன் மேலுடன் திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வந்துள்ளார்.

சாமி தரிசனத்திற்கு பிறகு வெளியே வந்த காஜல் அகர்வால் பத்திரிக்கையாளர்களுக்கு தனது மகனுடன் போஸ் கொடுத்து இருக்கின்றார் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது.காஜல் அகர்வால் இதுவே முதல் முறையாக தன்னுடைய மகனுடன் வெளியே வரும் முதலிடம் ஆகும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments