காஜல் அகர்வால் 2004 ஆம் ஆண்டு கியூன்! ஹோ கயா நா என்ற ஹிந்தி திரைப்படத்தின் வாயிலாக சினிமா துறைக்கு அறிமுகமானார். இதைத் தொடர்ந்து 2007 ஆண்டு லட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்கு ஹிந்தி என மாறி மாறி நடித்துக் கொண்டு வந்திருந்தவர் 2007 ஆம் ஆண்டு பரத்தின் பழனி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அறிமுகப் படமே இவருக்கு வெற்றி படமாக அமைந்தது. தொடர்ந்து இவருக்கு தமிழில் சரோஜ, பொம்மலாட்டம்,மோதி விளையாடு போன்ற படங்களில் நடித்திருந்தார். ஆனால் இந்த திரைப்படங்கள் எதுவும் சரியாக ஓடவில்லை. மீண்டும் தெலுங்குக்கு சென்று மகதீரா எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்த திரைப்படம் ஒரு பிளாக்பஸ்டர் திரைப்படமாக அமைந்தது.
அதைத் தொடர்ந்து தெலுங்கிலே நடித்துக் கொண்டிருந்தவர் அப்போ ஹிந்தி மற்றும் தமிழ் படங்களிலும் நடித்துக் கொண்டு வந்தார். அந்த வகையில் இவர் தமிழில் முன்னணி நடிகரான விஜய் மற்றும் அஜித் தனுஷ்,கார்த்தி உடன் நடித்துள்ளார்.
தற்பொழுது தமிழில் முன்னணி இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர் கமலஹாசனின் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் இவர் நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் திருமணம் ஆகி இவருக்கு ஒரு குழந்தை பிறந்தது.
அவரின் கர்ப்ப கால புகைப்படங்கள் மற்றும் குழந்தை பிறந்த பிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளனர். அதிலும் குறிப்பாக அவர் தனது குழந்தைக்கு பால் ஊட்டும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். அது தாய்மையான அதற்கு அர்த்தம் என ரசிகர்கள் எடுத்துக் கொண்டனர்.
இப்படி இருக்கும் நிலையை குழந்தை பிறந்த பிறகும் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார். மேலும் இவர் குழந்தை பிறந்த பிறகு இப்படி புகைப்படங்களை வெளியிடுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்த அளவுக்கு கவர்ச்சியில் இறங்கி புகைப்படங்களை வெளியிட்டு வந்த வண்ணம் உள்ளார். மேலும் இவர் வெளியிடக்கூடிய புகைப்படத்தை அனைத்திற்கும் ரசிகர்கள் குழந்தை பிறந்த பிறகு உனது கவர்ச்சி உடம்பு இன்னும் குறையவில்லை என்று விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.
இவர் இவ்வாறு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதால் ரசிகர்கள் அனைவரும் இவர் பக்கம் சாய்ந்து விடுவார்கள் என தற்போது உள்ள இளம் நடிகைகள் பயத்தில் உள்ளனர். அதனால் இளம் நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் வருமா என பயத்தில் உள்ளனர்.