கோகுல் என்பவர் தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார். 2011 ஆம் ஆண்டில் நடிகர் ஜீவாவின் ரௌத்திரம் என்னும் திரைப்படத்தை இயக்கினார் இந்த திரைப்படம் இவருக்கு முதல் படம் ஆகும். தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற திரைப்படத்தை இயக்கினார்.
இவர் இயக்கத்தில் வெளிவந்த முதல் இரண்டு திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி படமாக அமைந்தது. தொடர்ந்து நடிகர் கார்த்திக்கை வைத்து காஷ்மோரா என்ற திரைப்படத்தை இயக்கினார் இந்த திரைப்படத்தில் நயன்தாரா மற்றும் ஸ்ரீதிவ்யாவும் நடித்திருந்தனர். கலையான விமர்சனங்களை பெற்று இந்த படம் தோல்வியை அடைந்தது.
இதைத் தொடர்ந்து மலையாளத்தில் வெற்றி பெற்ற ஹெலன் என்ற படத்தை தமிழில் அன்பினிற்கினியாள் என்ற பெயரில் ரீமேக் செய்து இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இரண்டாம் பாகத்தை கொரோனா குமார் என்ற பெயரில் இயக்க திட்டமிட்டுள்ளார்.
இந்த படத்திற்கும் முதலில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது சில காரணங்களால் அவர் இந்த படத்தில் இருந்து விலகி விட்டார். விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிகர் சிம்பு இந்த படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.ஆனால் சிம்பு தொடர்ந்து வெந்து தணிந்தது காடு பத்து தல போன்ற அடுத்தடுத்த படங்களில் நடிப்பதில் பிஸியாக இருந்து வரும் நிலையில் கொரோனா குமார் படம் தொடங்காமலே இருந்து வந்தது.
தொடர்ந்து இந்த படத்தில் இருந்து சிம்பு விலகி விட்டதாகவும் அவருக்கு பதிலாக லவ் டுடே படத்தை இயக்கிய நடித்த பிரதீப் ரங்க நாதனே நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் ஏதும் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.