ஐஸ்வர்யா ராஜேஷ் சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளராக தனது பணியை தொடங்கினார். அதைத்தொடர்ந்து கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். 2010 ஆம் ஆண்டு நீதானா அவன் என்ற தமிழ் திரைப்படத்தில் முதன் முதலில் நடித்தார்.அதைத்தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு அட்டகத்தி திரைப்படத்தில் அமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றார். அதன் பிறகும் பல திரைப்படங்களை நடித்து இருந்தாலும் 2015 ஆம் ஆண்டு காக்கா முட்டை எனும் திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்றார். காக்கா முட்டை திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தமிழக அரசு திரைப்பட விருது இவருக்கு கிடைத்தது.
2018 ஆம் ஆண்டு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை எனும் திரைப்படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் பத்மா என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் நடித்த பத்மா எனும் கதாபாத்திரம் பேசும் பொருளாக அமைந்தது. அதைத்தொடர்ந்து அதே வருடம் கனா என்னும் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
இவர் எந்த ஒரு படத்தில் நடித்தாலும் அந்த படத்திற்காக தனது முழு உழைப்பையும் போட்டு தான் நடித்து வருகிறார். தமிழ் படங்களைத் தொடர்ந்து தெலுங்கு மலையாளம் ஹிந்தி போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.தற்பொழுது நடிகை லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் ஜோதிகாவிற்கு இணையாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.நடிகை நயன்தாரா மற்றும் சமந்தாவுக்கு இணையாக தற்பொழுது ஐஸ்வர்யா ராஜேஷ் உருவெடுத்துள்ளார். காரணம் இவர் ஒவ்வொரு படங்களிலும் நடிக்கும் பொழுது அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுகிறார்.அந்த வகையில் சமீபத்தில் இவர் நடித்த டிரைவர் ஜமுனா எனும் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது.இதன் மூலம் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து கொண்டு வருகிறது.
சமீப காலமாக நடிகர் நடிகைகள் படங்கள் நடித்து முடித்து விட்டால் சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் காஷ்மீருக்கு சென்று அங்கு இவர் சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்து வெளியிட்டுள்ளார் இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.இவர் வெளியிடும் ஒவ்வொரு புகைப்படமும் இணையத்தில் தீ யாக பரவி வருகிறது.